Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரம் - அக்டோபர் 27 - "மண்ணுரிமை வாரம்".

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை விடுதலைச்சிறுத்தைகளின் "மண்ணுரிமை வாரம்".


காஞ்சி மாவட்ட தலைநகரில் மண்ணுரிமை வாரம் - துண்டறிக்கை பிரச்சாரம்.
 
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் ஆணையின்படி இன்று அக்டோபர் 27, காலை 11 மணிக்கு மாவட்ட தலைநகர் காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் தந்தை பெரியார் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக சென்று பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிக்கொண்டு மண்ணுரிமைக்கான துண்டறிக்கைகளை மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் வழங்கினார்.

உடன் காஞ்சி ஒன்றிய, நகர மேலிட பொறுப்பாளர் பாசறை செல்வராசு, மாவட்ட துணை செயலாளர் இந்திரா அம்பேதகர்வளவன், நகர செயலாளர் திருமாதாசன், ஒன்றிய அமைப்பாளர் ஸ்டான்லி, செயலாளர் டேவிட், மின்சாரவாரியம் சேகர், மாவட்ட நிர்வாகிகள் ஊடக மையம் ஆதவன், ஏ.வி.இராவணன், செஞ்சுடர், சுந்தரமூர்த்தி, திலீப், ஒன்றிய நிர்வாகிகள் ஆட்டோ பாட்சா, தணிகாவளவன், விடியல் வெற்றித்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைவர் எழுச்சித்தமிழர் தலைமையில்

பஞ்சமி நிலத்தை மீட்டெடுப்போம்!
பழந்தமிழர் குலத்தைப் பாதுகாப்போம்!!

இழந்த மண்ணை மீட்டெடுப்போம்!
இறுதிவரைக்கும் போர்த்தொடுப்போம்!!
----------------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...