Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் மீது காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதல், தமிழக அரசின் காவல் துறையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

தமிழக அரசின் அராஜக போக்கு!
தமிழக அரசின் காவல் துறையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் மீது காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதல், கை - கால்கள் உடைப்பு !

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம், புதுப்பட்டினம் ராஜா நகர் பகுதி மக்கள் வசிக்கும் வீடுகளை அரசு அகற்றுவதை தடுக்க மக்களை திரட்டி போராடிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களை தமிழக அரசு காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது. இதில் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களது கை கால்கள் காவலர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

மேலும் 20 க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் நிர்வாகிகள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையில் போராடிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்ட துணை செயலாளர் கிட்டு, ஆ.ந.இளையவளவன், 150 பெண்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் !.

இச்சம்பவத்தினைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகரங்களில் விடுதலைச்சிறுத்தைகள் தொடர்ந்து போராட்டம், சாலை மறியல் செய்து வருகிறார்கள்.

செய்தி:
ஊடக மையம் - விடுதலைச்சிறுத்தைகள் கட்சி,
காஞ்சிவரம் மாவட்டம்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...