Sporty Magazine official website | Members area : Register | Sign in

தர்மபுரி சம்பவம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எழுச்சித்தமிழர் ஆறுதல் !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
 தர்மபுரி சம்பவம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எழுச்சித்தமிழர் ஆறுதல் !


 தர்மபுரி மாவட்டத்தில் சாதிவெறியால் பாதிகப்பட்ட மக்களை எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் நேற்று 12.11.12 நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஒவொருவரும் கதறி அழுத காட்சி எழுச்சித் தமிழரை கண் கலங்கவைத்தது. பாதிகப்பட்ட அனைத்து கிராமத்திலும் ஒவ்வொரு வீடாக சென்று பார்வையிட்டார். பின்னர் எலோருக்கும் அச்சத்தை போக்கும் வகையில் அனைத்து மக்களையும் ஒன்றாக அமரவைத்து பேசினார் , சாதி வன்கொடுமையால் இல்லங்களையும் உடமைகளையும் இழந்து வாடும் , நத்தம் - அண்ணாநகர் , செங்கல் மேடு , கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் வாழும் பறையர்களுக்கு ஆறுதல் கூறி , இனி அச்சமின்றி வாழவும் , அமைப்பாய் திரண்டு கல்வி கற்று அரசியல் சக்தியாய் ஒருங்கிணைந்து செயலாற்றிட அறிவுறுத்தினார் , தலித்துக்கள் பாதிக்கபடத்தில் முதன் முறையாக கண்டன அறிக்கைவிட்ட கருணாநிதிக்கும் , நிவாரணம் வழங்கி வாழ்வதரதிர்க்கு உதவிட உதறிவிட்ட ஜெயளைதவிர்க்கும் ,2400 நபர்களில் 138 நபர்களிமட்டுமாவது கைது செய்த தர்மபுரி SP அஸ்ரா கார்க் ஆகியோருக்கு நன்றி பாராட்டினார் , சம்பவம் நடந்து 4 மணி நேரம் கழித்து வந்த தருமபுரி போலீசாருக்கு கண்டனத்தை பதிவு செய்தார். எழுச்சித் தமிழர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது .மக்களுக்கும் உரிய நிவாரணத்தை விரைவில் வழங்கவேண்டும் என்றும் ,இத்தகைய சாதிய வன்முறையில் ஈடுபட்ட ஆண்களையும் ,பெண்களையும் கைது செய்யவேண்டும் ,சாதிய வன்முறையை தூண்டி அரசியல் ஆதாயம் பெறதுடிக்கும் கட்சிகளை அனைத்தும் இந்திய அரசு முடக்க வேண்டும் என்று பேசினார் . மேலும் தமிழகம் முழுவதும் வருகிற 19 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பேசினார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...