Sporty Magazine official website | Members area : Register | Sign in

விடுதலைச்சிறுத்தைகள் வாகனங்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சாதிவெறியர்களை கண்டித்து கல்ப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
சனவரி 28 அன்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, லத்தூர் ஒன்றியம் கடலூர் கிராமத்தில் அடையாளம் தெரியாத சாதி வெறியர்களால் கொலை வெறியோடு விடுதலைச் சிறுத்தைகள் வாகனங்கள் தாக்கப்பட்டது.
அதனை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்பாட்டம் கல்பாக்கத்தில் சனவரி 30 அன்று நடைபெற்றது.



இந்த ஆர்பாட்டத்திற்கு காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர்கள் ஆ.அம்பேத்கர்வளவன், வீ.கிட்டு, தே.தென்னவன், பூவிழி, மேனகா, இளையவளவன், எழிலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் மா.செ.சிந்தனைச்செல்வன் கண்டன உரை நிகழ்த்தினார்.

இந்த ஆர்பாட்டத்தில்,
*கொலைவெறி தாக்குதல் நடத்திய சாதிவெறியர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவும்,
*விடுதலைச் சிறுத்தைகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப்பெறவும்,
*எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாகிகள் பு.பே.கலைவடிவன், நாகப்பன், முத்தமிழன், மாவட்ட ஊடக மைய செயலாளர் மதி.ஆதவன், மாவட்ட நிர்வாகிகள் சு.தம்பிதுரை, திருமாதாசன், நகர் பாலாஜி, லத்தூர் மல்லிமாறன் உள்ளிட்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்ப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கலந்துகொண்டனர். இறுதியில் மாவட்ட இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை துணைசெயலாளர் வேலு பிரபாகரன் நன்றியுரை நிகழ்த்தினார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...