Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலை அ.தி.மு.க. பேனர்கள் வைத்து மறைப்பு !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலை அ.தி.மு.க. பேனர்கள் வைத்து மறைப்பு !

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் முன்னால் அ.தி.மு.க. வினர் தங்களது கட்சி விளம்பர தட்டிகளை வைத்து மறைத்து விட்டனர

. இதனை கண்டித்து வாலாஜாபாத் பகுதி விடுதலைச்சிறுத்தைகள் அணைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி அ.தி.மு.க. கட்சி விளம்பர தட்டிகளை அப்புறப்படுத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச்சிறுத்தைகள் வாலாஜாபாத் நகர செயலாளர் அசோக் குமார், ஒன்றிய செயலாளர் உதயசூரியன்,மாநில நிர்வாகி பாசறை செல்வராசு, காங்கிரசு கட்சியை சேர்ந்த வாலாஜாபாத் சுகுமாரன், தென்னேரி சுகுமாரன், புரட்சி பாரதம் சுகன், சிபிராஜ், ராவ், தி.மு.க. நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாஸ்கர், தே .மு.தி.க பழனிராஜ், இந்திய குடியரசு கட்சி சாமிநாதன், முத்து, பி.ஜே.பி. சாந்தம் ஏழுமலை,பெரியராஜ், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.


மேலும் 50 க்கும் மேற்ப்பட்ட தலித் தோழர்கள் கலந்து கொண்டு அ.தி.மு.க. வினருக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அப்பகுதி காவல் துறையினர் விரைந்து வந்து போராட்ட குழுவினரிடம் பேசி சமரசம் செய்து வைத்தனர். இதனால் வாலாஜாபாத் பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...