அநாதையாக ஈழத்தில் தமிழினம் அலைகிறது. கலைஞர் அவர்களே, நீங்கள்தான் தமிழீழத் தனித் தாயகம் அமைத்துத் தர வேண்டும்" என்று திருமா சொன்னபோது மாநாட்டுப் பந்தல் அதிர்ந்தது. இது தமிழைப் பாராட்டும் மாநாடு என்பதைவிட தமிழனைத் தட்டி எழுப்ப வேண்டிய மாநாடு. காலம் அறிந்து இதை கலைஞர் செய்திருக்கிறார். நிலத்தை, களத்தை, இனத்தை இழந்த தமிழா... நீ கவலைப்படாதே என்று சொல்வதற்காகத்தான் இந்த மாநாடு நடக்கிறது. நம்முடைய தமிழன் இலங்கையை ஆண்டவன். ஆனால், இன்று தமிழ் நிலத்தை சிங்களவன் ஆக்கிரமித்துள்ளான். அநாதையாக அந்த இனம் அலைகிறது. கலைஞர் அவர்களே, நீங்கள்தான் தமிழீழத் தனித் தாயகம் அமைத்துத் தர வேண்டும்" என்று திருமா சொன்னபோது மாநாட்டுப் பந்தல் அதிர்ந்தது. அடுத்து வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் டி.ராஜா, பாரதிய ஜனதா இல.கணேசன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோர் இது தொடர்பாகப் பேச தூண்டுதலாக அமைந்தது திருமாவின் பேச்சு.
நன்றி : ஆனந்த விகடன் : 07-07-2010