Sporty Magazine official website | Members area : Register | Sign in

கேரளாவில் எழுச்சித்தமிழருக்கு பாராட்டு விழா !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
கேரளா மாநிலம் முணாறு பகுதி விடுதலைச்சிறுத்தைகள் சார்ப்பில் எழுச்சித்தமிழருக்கு சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றதற்காக‌ பாராட்டு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.





இத்தகைய பாராட்டு விழாவை ஒருங்கிணைத்திருந்தார் எழுச்சித்தமிழரின் தனிச்செயலாளரும் கேரளா மாநில அமைப்புச்செயலாளரான இளஞ்.சேகுவேரா அவர்கள். கேராளா மாநிலம் முழுவதும் விடுதலைச்சிறுத்தைகள் தோழர்கள் ஆரவாரத்தோடு ஆற்பரித்தனர்.முணாறு மலையில் நடைப்பெற்ற பாராட்டு விழா ஒரு மாநாடு போல் அமைந்தது.அத்தகைய பாராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக எழுச்சித்தமிழருடன் மதுரையில் இருந்து முணாறு வரை கடும்மலைபகுதியில் பயணம் செய்த‌ விடுதலைச்சிறுத்தைகட்சி தோழர்கள் அனைவருக்கும் ஒரு புதிய அனுபவமாக அமைந்தது அத்தகைய பாராட்டு விழா.


கேரள மாநிலத்திற்கு செல்லும் வழியில் 20/12/2009 அன்று காலை 9.00 மணியளவில் எழுச்சித்தமிழர் அவர்கள் தேனி மாவட்டம் விடுதலைச்சிறுத்தைகளின் துணைநிலை அமைப்பான தொழிலாளர் விடுதலை முன்னணி பேர் பலகையை திறந்துவைத்தார்.


எழுச்சித்தமிழர் அவர்களுக்கு தேனியில் இருந்து முணாறு செல்லும் வரை பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


மூணார் செல்லும் வழியில் சாலைபணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் எழுச்சித்தமிழரின் வாகனத்தை கண்டது ஆரவாரத்துடன் கையசைத்தனர். எழுச்சித்தமிழர் தொழிலாளர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு தன் பயணத்தை தொடர்ந்தார்.






மாலை 3.00 மணியளவில் எழுச்சித்தமிழர் முணாறு சென்றடைந்தார்.கேரளா மாநிலம் முணாறு பகுதி விடுதலைச்சிறுத்தைகள் சார்ப்பில் எழுச்சித்தமிழருக்கு சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றதற்காக‌ பாராட்டு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.




வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...