Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சி மாவட்ட விடுதலைச்சிறுத்தைகளின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 03.11.2013 அன்று மறைமலைநகர் D.V.V.P திருமண அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று இந்திய அரசை வலியுறுத்தி சென்னையில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் 03.11.2013 அன்று நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் 05.11.2013 அன்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

எனவே கடந்த 22.10.2013 அன்று நடைபெற்ற காஞ்சி மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், துணைநிலை அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அமைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம், வருகின்ற 03.11.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மறைமலைநகர் D.V.V.P திருமண அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும்.

நிர்வாகிகள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்கவும்.

இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்
காஞ்சி மாவட்ட செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
------------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...