இனம் எது.? மொழி எது.? என்கிற அடையாளங்களைத் தாண்டி சாதி எது.? மதம் எது.?
என்கிற வரம்புகளைத் தாண்டி மனிதநேயத்திற்கு எதிராக ஒரு கொடுமை
நிகழுமேயானால், அதைக்கண்டு கொந்தளிக்க வேண்டும், குமுற வேண்டும் என்பது
தான் சராசரி மனித உணர்வுகளிலிருந்து மேம்பட்டது; அதுதான் கொள்கை சார்ந்தது.விடுதலைச்சிறுத்தைகள் தமிழ்த்தேசியத்தைப் பார்ப்பதும், தமிழீழத்தை ஆதரிப்பதும், தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிப்பதும் ஒடுக்குமுறை எதிர்ப்பு என்கிற கோணத்திலிருந்து தான்; அது விடுதலைப் போராட்டம் என்கிற பார்வையிலிருந்து தான்; மனிதநேயம் என்கிற அடிப்படையில் தான்.