Sporty Magazine official website | Members area : Register | Sign in

01.08.2013, ''அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை'' சட்டத்தை நடைமுறைப்படுத்திட தமிழக அரசை வலியுறுத்தி இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காஞ்சி மாவட்ட திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

திராவிடர் கழக காஞ்சி மாவட்ட செயலாளர் டி.ஏ.ஜி. அசோகன் அவர்கள் தலைமை வகித்தார். தி.மு.க. காஞ்சி நகர செயலாளர் CVMA சேகரன் வரவேற்புரையாற்றினார். விடுதலைச்சிறுத்தைகளின் கட்சி காஞ்சி நகர, ஒன்றிய மேலிடப் பொருப்பாளர் பாசறை அ. செல்வராசு முன்னிலை வகித்தார்.
 
https://www.facebook.com/kanchi.vck/posts/405100099606616

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் திராவிடர் கழகத்தினருடன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட துணை செயலாளர் இந்திரா அம்பேத்கர்வளவன், காஞ்சி நகர செயலாளர் திருமாதாசன், வாலாசாபாத் நகர செயலாளர் அசோக்குமார், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் மல்லிமாறன், ஊடக மையம் ஆதவன், ஏ.வி.ஆர், நகர்.பாலாஜி, மாணவரணி கண்ணன், இளமாறன், மு.க.திலீப், விடியல் இரா.வெற்றித்தமிழன் உள்ளிட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தோழர் காஞ்சி கதிரவன் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தி.மு.க. காஞ்சி ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
----------------------------------------------------------
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...