Sporty Magazine official website | Members area : Register | Sign in

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திரு. வேலுப்பிள்ளை பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி எழுச்சித்தமிழர் பேட்டி.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :






தமிழீழ தேசிய தலைவர் தந்தையார் மதிப்பிற்குறிய திருவேங்கடம் வேலுபிள்ளை அவர்கள் கடந்த சனவரி 6 ஆம் தேதி நள்ளிரவு வேளையில் திடீரென காலமாகிவிட்டார் .இந்த செய்தி 7 ஆம் தேதி அளவில் உலகமெங்கும் காட்டுதீயாய் பரவியது.இனமான ஒவ்வொருவரும் நெஞ்சை உலுக்கிய செய்தியாய் அமைந்தது சனவரி 7ஆம் தேதி அன்று பிற்பகல் எனக்கு இந்த தகவல் கிடைத்தது.நான் அதிர்ச்சி அடைந்தேன் ஏன் என்றால் மதிப்பிற்குறிய தந்தை வேலுபிள்ளை அவர்களையும் தாயார் பார்வதி அம்மாவையும் ,மேதகு பிரபாகரனின் மாமியார் அவர்களையும் ராணுவ கட்டுபாட்டில் இருந்து விடுவிக்க கூறி இந்தியாவிலோ வேரு நாட்டுகோ அழைத்து வர வேண்டும் என முயற்சியில் ஈடுபட்டுயிருந்தேன் என்ற வேளையில் திடீரென்று மேதகு பிரபாகரன் தந்தையார் காலமாகிவிட்டார் என்ற தகவல் என்னால் தாங்கிகொள்ளமுடியவில்லை .உடனடியாக கொழும்புக்கு சென்று அவருடைய பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென்று நான் கிளம்பினேன் ஆனாலும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த சிங்கள அரசு அனுமதிக்குமா என்கின்ற சந்தேகம் எழுந்தது .ஈழத்தில் இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ,செல்வம் அடைக்கலநாதன் அவர்களையும் தொடர்புகொண்டு அய்யா வேலுபிள்ளை அவர்களின் பூதவுடலை பெருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிற்களா என்று கேட்ட பொழுது அதற்கான முயற்சி நடந்துகொண்டிருக்கிறது .அவருடைய பூதவுடலை வல்வெட்டிதுறைக்கு எடுத்து செல்லபோகிறோம் என்று சொன்னார்கள் நானும் வல்வெட்டித்துறைக்கு சென்று இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சனவரி 8 ஆம் தேதி கொழும்புக்கு பயணம் செய்தேன் .9 ஆம் தேதி கண்டி யாழ் சாலையில் செல்வதற்காக ராணுவதுறை அமைச்சரிடத்தில் இருந்து அனுமதி பெற வேண்டும் என்ற தகவலை சிவாஜிலிங்கம் , செல்வம் ,அவர்களும் தெரிவித்தனர் அப்படி விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றார்கள் 8 ஆம் தேதி நள்ளிரவில் புறப்பட்டு 9ஆம் தேதி காலை அவருடைய பூதவுடலுக்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தினார்கள் நானும் அங்கு சென்று அஞ்சலி செலுத்தினேன். அங்கிருந்து வல்வெட்டிதுறைக்கு சென்றோம் ,சரியாக மாலை 5 மணியளவில் தந்தை வேலுபிள்ளை பூதவுடலை தாங்கி சென்ற வண்டி வல்வெட்டிதுறை போய் சேர்ந்தது அங்கும் அஞ்சலி செலுத்திவிட்டு இரவு 11 மணிவரை அங்கிருந்தேன் ,அடுத்த நாள் 10 ஆம் தேதி அவருடைய பூதவுடலுக்கு வாய்கறிசி கொடுத்தேன் பூதவுடலுக்கு தீமூட்டபட்டது இறுதி வரை அங்கு இருந்து சடங்கு காரியங்களை செய்தேன்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...